Thursday 21 March 2019

சொல்

உன்
இருப்பை வேர்களாக்குகிறேன்
மகிழ்ச்சிகளை கிளைகளாக்குகிறேன்
அன்பை இலைகளாக்குகிறேன்
புன்னகையை மலர்களாக்குகிறேன்
நீ
மண்ணில் நிலைபெற்று
விண்ணுடன் உறவாடி
நீண்ட காலம்
நிலைத்திரு

உனது துயரங்களை
நான் பெற்றுக் கொள்கிறேன்