Friday 8 March 2019

திங்கள்

அந்தி விளக்கே
மாலையில் மலர்ந்த தென்றல்
மணம் வீசும் இந்த இரவில்
எங்கும் பரவி நிறைகிறது
நதியாக
உன் ஒளி
உன் கருணையால்
ஆதுரம் பெறுகிறது
மானுடர் துயர்
உன் பார்வை
விடுவிக்கிறது
அறியாமையின் தளைகளை
உணர்வெழுச்சியின்
தூய கண்ணீர்
காணிக்கையாக்கப்படுகிறது
யுக யுகங்களாக
உன்னிடம்