அந்தி விளக்கே
மாலையில் மலர்ந்த தென்றல்
மணம் வீசும் இந்த இரவில்
எங்கும் பரவி நிறைகிறது
நதியாக
உன் ஒளி
உன் கருணையால்
ஆதுரம் பெறுகிறது
மானுடர் துயர்
உன் பார்வை
விடுவிக்கிறது
அறியாமையின் தளைகளை
உணர்வெழுச்சியின்
தூய கண்ணீர்
காணிக்கையாக்கப்படுகிறது
யுக யுகங்களாக
உன்னிடம்