Sunday 17 March 2019

உழைத்துக் களைத்த உடல்களின் வியர்வை
நீதிக்காக சிந்தப்படும் இரத்தம்
மதிப்பீடுகளுக்காக சாகத் துணிந்தவர்களின் முனைப்பு
பிறருக்காக சிந்தும் கண்ணீர்
துயருற்றவனைத் தேற்றும் ஓர் ஆறுதல் சொல்
அகம் மலர்ந்த புன்னகை

இந்தப் புவி
தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறது
ஒவ்வொரு முறையும்