ஒரு நெடுஞ்சாலையில்
கிளையில் பறவைகள் நிற்கும்
நிழலில் பிராணிகள் நிற்கும்
மண்ணில் ஆல் நிற்கும்
பேருந்து நிறுத்தம்
இல்லாத இடத்தில்
நின்று கொண்டிருக்கிறது
மூன்று எலுமிச்சைகள்
செருகப்பட்ட சூலம்
நடத்துனர்களும்
வாகன ஓட்டுனர்களும்
சிரத்தையாய்
முன்நின்று
வேண்டிக் கொள்கின்றனர்
வழித்துணையாய் உடன்வர
மரத்தின் மேல்
கவிந்து நின்றிருந்தது
வெண்மேகம்
கிளையில் பறவைகள் நிற்கும்
நிழலில் பிராணிகள் நிற்கும்
மண்ணில் ஆல் நிற்கும்
பேருந்து நிறுத்தம்
இல்லாத இடத்தில்
நின்று கொண்டிருக்கிறது
மூன்று எலுமிச்சைகள்
செருகப்பட்ட சூலம்
நடத்துனர்களும்
வாகன ஓட்டுனர்களும்
சிரத்தையாய்
முன்நின்று
வேண்டிக் கொள்கின்றனர்
வழித்துணையாய் உடன்வர
மரத்தின் மேல்
கவிந்து நின்றிருந்தது
வெண்மேகம்