Monday 1 April 2019

நில் கவனி செல்

ஒரு நெடுஞ்சாலையில்
கிளையில் பறவைகள் நிற்கும்
நிழலில் பிராணிகள் நிற்கும்
மண்ணில் ஆல் நிற்கும்
பேருந்து நிறுத்தம்
இல்லாத இடத்தில்
நின்று கொண்டிருக்கிறது
மூன்று எலுமிச்சைகள்
செருகப்பட்ட சூலம்
நடத்துனர்களும்
வாகன ஓட்டுனர்களும்
சிரத்தையாய்
முன்நின்று
வேண்டிக் கொள்கின்றனர்
வழித்துணையாய் உடன்வர
மரத்தின் மேல்
கவிந்து நின்றிருந்தது
வெண்மேகம்