Monday 1 April 2019

சைத்ரிகனின் கரம்
ஒரு வெள்ளைக் காகிதத்தில்
ஒரு சூரியனை
ஒரு சந்திரனை
சிறு சிறு மலைக் குன்றுகளை
ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நதியை
அதில் அலையும் மீன்களை
அந்தரத்தில் நிற்கும் கொத்திப் பறவைகளை
சிறு குழந்தைகளுடன் நின்றிருக்கும்
வாலைக் குழைக்கும் நாயை
ஒரு சிறு கீற்று வீட்டை
அதனுள் புகையும் அடுப்பங்கரையை
சில கணங்களில்
உருவாக்கி விடுவதைப் போல
நீ
ஒரு மாய உலகத்தை
உருவாக்கினாய்
பின்னர்
அதிலிருந்து எப்படி வெளியே வருவது
என்பதைப் பற்றி
நாம் யோசிக்கவேயில்லை