Friday 26 April 2019

மௌன மார்க்கம்

அவள்
தன் சொற்களை
வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு
பழகிக் கொண்டாள்
தன் அன்பை
தன் பிரியங்களை
தன் காதலை

நூறாண்டுகளாய்
நின்றிருக்கும்
அந்த மரம்
ஏதேனும் உரையாடியதா
கூடடையும் பறவைகளிடம்
சாலையிடம்
வாய்க்காலிடம்

விண்ணகம் நோக்கி செல்கிறது
தினமும்
மௌன மார்க்கமாக