Friday 26 April 2019

பெருந்தன்மை

எதையும் புரிந்து கொள்ளாத
எப்போதும் ஐயப்படும்
எதற்கும் தயங்கும்
எதிலும் ஆர்வம் இல்லாத
எங்கும் நம்பிக்கை கொள்ளாத
சாமானிய வெளியில்
நிகழும் எல்லா கிரீச்சிடல்களையும்
நீ
எப்போதும்
மௌனமாகக் கடந்து செல்கிறாய்