Tuesday 9 April 2019

மணம்

மக்கள் நிறையும்
திருவிழா வீதிகளில்
எப்போதும் உனைச் சூழும்
தனிமை
இல்லாமல் இருக்கிறாய்
கோயில் யானையை எப்படியாவது தொட நினைக்கிறாய்
தேர் வடத்தினை முன்னே சென்று தொட்டுக் கும்பிடுகிறாய்
ஒவ்வொரு விளையாட்டுப் பொருளையும்
அது என்ன அது என்ன என்கிறாய்
வாங்கித் தரட்டுமா என்று கேட்கும் போது
நாணி முகம் சிவந்து புன்னகைக்கிறாய்
நெரிசல் மிகுந்திருக்கையிலும் அமைதியாக சாமி கும்பிடுகிறாய்
மலர் தொடுக்கும் கரங்கள்
மலர் மணம் பெறுவது போல
உன் மணம் பெற்றுக் கொள்கிறேன்
திருவிழாக்களில்