Thursday 25 April 2019

என்னால் சிலவற்றைச் சொல்ல முடியும்

என்னால் சிலவற்றைச்  சொல்ல முடியும்
உன் முகத்தில் இருக்கும் களங்கமின்மையை
சிறியன சிந்தியாத உன் மனத்தை
எந்நிலையிலும் நீ  கொள்ளும் நம்பிக்கையை
இடரிலும் துயரிலும் உன் கண்களில் தேங்கும் நீரின் முதற்துளியை
சாமானியத்தின் இராட்சசக் கரங்கள் சூழும் போது
நீ கொள்ளும் அச்சத்தை
சாதாரணமாக உன்னில் நிறையும் அமைதியை
முடிவற்ற அழகில் நீ  அடையும் மலர்ச்சியை
உன் குரல் மீட்டும் யாழினும் இனிய இன்னிசையை

என்னால் சிலவற்றைச் சொல்ல முடியும்