என்னால் சிலவற்றைச் சொல்ல முடியும்
உன் முகத்தில் இருக்கும் களங்கமின்மையை
சிறியன சிந்தியாத உன் மனத்தை
எந்நிலையிலும் நீ கொள்ளும் நம்பிக்கையை
இடரிலும் துயரிலும் உன் கண்களில் தேங்கும் நீரின் முதற்துளியை
சாமானியத்தின் இராட்சசக் கரங்கள் சூழும் போது
நீ கொள்ளும் அச்சத்தை
சாதாரணமாக உன்னில் நிறையும் அமைதியை
முடிவற்ற அழகில் நீ அடையும் மலர்ச்சியை
உன் குரல் மீட்டும் யாழினும் இனிய இன்னிசையை
என்னால் சிலவற்றைச் சொல்ல முடியும்
உன் முகத்தில் இருக்கும் களங்கமின்மையை
சிறியன சிந்தியாத உன் மனத்தை
எந்நிலையிலும் நீ கொள்ளும் நம்பிக்கையை
இடரிலும் துயரிலும் உன் கண்களில் தேங்கும் நீரின் முதற்துளியை
சாமானியத்தின் இராட்சசக் கரங்கள் சூழும் போது
நீ கொள்ளும் அச்சத்தை
சாதாரணமாக உன்னில் நிறையும் அமைதியை
முடிவற்ற அழகில் நீ அடையும் மலர்ச்சியை
உன் குரல் மீட்டும் யாழினும் இனிய இன்னிசையை
என்னால் சிலவற்றைச் சொல்ல முடியும்