அன்பின் சொற்கள்
மௌனத்துக்கும் மெல்லொலிக்கும்
இடையில்
இருக்கின்றன
அன்பின் வெளிப்பாடுகள்
நுண்ணியதிலும்
நுண்ணியதாக
உருவம் பெறுகின்றன
அன்பின் பிரதேசங்கள்
விண்ணுக்கும்
புவிக்கும்
அப்பால் உள்ளன
அன்பின் முதற்சொல்
உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது
யுகாந்திரங்களாக
அசைவற்ற புவியை
சலனமுறச் செய்தது
அன்பின் இருப்பு
மௌனத்துக்கும் மெல்லொலிக்கும்
இடையில்
இருக்கின்றன
அன்பின் வெளிப்பாடுகள்
நுண்ணியதிலும்
நுண்ணியதாக
உருவம் பெறுகின்றன
அன்பின் பிரதேசங்கள்
விண்ணுக்கும்
புவிக்கும்
அப்பால் உள்ளன
அன்பின் முதற்சொல்
உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது
யுகாந்திரங்களாக
அசைவற்ற புவியை
சலனமுறச் செய்தது
அன்பின் இருப்பு