Saturday 4 May 2019

அன்பு குறித்து சில அவதானங்கள்

அன்பின் சொற்கள்
மௌனத்துக்கும் மெல்லொலிக்கும்
இடையில்
இருக்கின்றன

அன்பின் வெளிப்பாடுகள்
நுண்ணியதிலும்
நுண்ணியதாக
உருவம் பெறுகின்றன

அன்பின் பிரதேசங்கள்
விண்ணுக்கும்
புவிக்கும்
அப்பால் உள்ளன

அன்பின் முதற்சொல்
உச்சரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது
யுகாந்திரங்களாக

அசைவற்ற புவியை
சலனமுறச் செய்தது
அன்பின் இருப்பு