நீ
அலைகள் ஆர்ப்பரித்த போது
ஆழ்கடலின் அமைதியுடனிருந்தாய்
மேகங்கள் நிறைந்திருந்த
வானமாய் இருந்தாய்
வான்மீன்களுக்கு நடுவே
அரசியென கொலு அமர்ந்தாய்
இலையெல்லாம்
பூவாக
மரத்தில் மலர்ந்திருந்தாய்
படிக ஒளி
மூக்குத்தியில்
ஒளிர்ந்தது
கலங்கரை விளக்கம் போல
இறைமையின்
பிரியத்துக்குரிய
தோழியானாய்
அலைகள் ஆர்ப்பரித்த போது
ஆழ்கடலின் அமைதியுடனிருந்தாய்
மேகங்கள் நிறைந்திருந்த
வானமாய் இருந்தாய்
வான்மீன்களுக்கு நடுவே
அரசியென கொலு அமர்ந்தாய்
இலையெல்லாம்
பூவாக
மரத்தில் மலர்ந்திருந்தாய்
படிக ஒளி
மூக்குத்தியில்
ஒளிர்ந்தது
கலங்கரை விளக்கம் போல
இறைமையின்
பிரியத்துக்குரிய
தோழியானாய்