Saturday 4 May 2019

உயிர்

நீ

அலைகள் ஆர்ப்பரித்த போது
ஆழ்கடலின் அமைதியுடனிருந்தாய்

மேகங்கள் நிறைந்திருந்த
வானமாய் இருந்தாய்

வான்மீன்களுக்கு நடுவே
அரசியென கொலு அமர்ந்தாய்

இலையெல்லாம்
பூவாக
மரத்தில் மலர்ந்திருந்தாய்

படிக ஒளி
மூக்குத்தியில்
ஒளிர்ந்தது
கலங்கரை விளக்கம் போல

இறைமையின்
பிரியத்துக்குரிய
தோழியானாய்