இந்த நகரில்
ஓர் அன்னையிடமிருந்து
அவள் குழந்தையை
சற்று நேரம் வைத்திருந்து
திருப்பித் தருபவனாக
ரயில் கடக்கையில்
உற்சாகமாய் கையசைக்கும்
மைதானத்துச் சிறுவர்களைப் பார்த்து
புன்னகைத்துக் கையசைப்பவனாக
தினமும் காலைப் பொழுதில்
வீட்டு வாசலுக்கு வரும்
குருவிகளுக்கு
தானியம் அளித்து
மகிழ்ந்து பார்த்திருப்பவனாக
பெருஞ்சுமை சுமந்து
சோர்ந்திருப்பவர்களுக்கு
சில கணங்கள்
ஆசுவாசம் அளிப்பவனாக
முடிவற்ற
தீராக்காதலை
தூய சொற்களில்
தெரிவித்துக் கொண்டேயிருப்பவனாக
அன்பின் பாலம்
உருவாக்கப்படும் போதெல்லாம்
அணில் போல
பிரியத்தின்
கைமணலை இடுபவனாக
இருந்து விட்டு போகிறேன்
ஓர் அன்னையிடமிருந்து
அவள் குழந்தையை
சற்று நேரம் வைத்திருந்து
திருப்பித் தருபவனாக
ரயில் கடக்கையில்
உற்சாகமாய் கையசைக்கும்
மைதானத்துச் சிறுவர்களைப் பார்த்து
புன்னகைத்துக் கையசைப்பவனாக
தினமும் காலைப் பொழுதில்
வீட்டு வாசலுக்கு வரும்
குருவிகளுக்கு
தானியம் அளித்து
மகிழ்ந்து பார்த்திருப்பவனாக
பெருஞ்சுமை சுமந்து
சோர்ந்திருப்பவர்களுக்கு
சில கணங்கள்
ஆசுவாசம் அளிப்பவனாக
முடிவற்ற
தீராக்காதலை
தூய சொற்களில்
தெரிவித்துக் கொண்டேயிருப்பவனாக
அன்பின் பாலம்
உருவாக்கப்படும் போதெல்லாம்
அணில் போல
பிரியத்தின்
கைமணலை இடுபவனாக
இருந்து விட்டு போகிறேன்