உன்னைப் புரிந்து கொள்வது
என்பது
மிக எளிதான ஒன்று
உனது மனம்
மேன்மைகளால்
குதூகலங்களால்
அன்பின் ஒளியால்
புத்தம் புது உணர்வுகளால்
உலகின்
எப்போதுமிருக்கும் அற்புதம்
உணரும் தன்மையால்
பிரியத்தால் இறைமை கொள்ளும் இயல்பால்
ஆனதாக
இருக்கிறது
என்னால்
உனது கண்ணீரைப்
புரிந்து கொள்ளவே முடியவில்லை
என்பது
மிக எளிதான ஒன்று
உனது மனம்
மேன்மைகளால்
குதூகலங்களால்
அன்பின் ஒளியால்
புத்தம் புது உணர்வுகளால்
உலகின்
எப்போதுமிருக்கும் அற்புதம்
உணரும் தன்மையால்
பிரியத்தால் இறைமை கொள்ளும் இயல்பால்
ஆனதாக
இருக்கிறது
என்னால்
உனது கண்ணீரைப்
புரிந்து கொள்ளவே முடியவில்லை