Saturday 4 May 2019

சில கணங்கள்

நீ
என்னிடம் பேசிக் கொண்டிருந்தாய்
உன் மீது பிரியமாய் இருந்தவர்களை
உன் மீது பெரும் நம்பிக்கை வைத்தவர்களை
உன்னை எப்போதும் மனமுவந்து பாராட்டியவர்களை
உன்னை வாழ்த்துபவர்களை
குதூகலம் தந்த அலைகடல் கரைகளை
மலைப்பிரதேசங்களின் குளிரை
மனிதர்கள் பொங்கும் நகரங்களை
காண விரும்பும் புதிய நிலப்பரப்புகளை
மலர்கள் பூத்திருக்கும் நீண்ட புல்வெளிகள் கொண்ட பூங்காக்களை

இவற்றைப் பற்றி
கூறியபோது
நீ
சில கணங்கள்
துக்கம் கொண்டு
மீண்டது
ஏன் என்பதை
நான்
யோசித்து யோசித்துப்
பார்த்தேன்