நகரம் மழையை எதிர்பார்க்கிறது
நண்பகலில்
உனது அறையின் வெம்மையைத் தாண்டி
வாசலுக்கு வந்ததும்
தன்னிச்சையாக
வானத்தைப் பார்க்கிறாய்
அசையும் மர இலைகளுக்கு
அப்பால் தெரியும் வானம்
மேகங்களின்றி பளிச்சென்றிருக்கிறது
அனல்காற்று வீசும்
பரபரப்பான சாலையை
மெல்ல கடக்கிறது
உனது வாகனம்
ஏன் அனல் ஏறிக் கொண்டே போகிறது
என்ற
மெல்லிய அச்சம் சூழ்கிறது
உன்னை
சட்டென நிகழ்ந்து விடும்
பல விஷயங்களின்
தாறுமாறான இயல்பால்
திகைக்கிறாய்
எப்போதோ
உள்ளங்கைகளில்
முகம் பொத்திக் கொள்கிறாய்
துயர் மிகும் பொழுதைக்
கடந்து உறங்குகையில்
நடுநிசியில்
உணரும் குளுமையால்
எழுந்து
சாளரங்களின் வழியே
பார்க்கிறாய்
எல்லாரும் உறங்கும் நகரில்
நீ
மட்டும் பெருமூச்சுடன் பார்த்திருக்க
பெய்து கொண்டிருக்கிறது
மழை
நண்பகலில்
உனது அறையின் வெம்மையைத் தாண்டி
வாசலுக்கு வந்ததும்
தன்னிச்சையாக
வானத்தைப் பார்க்கிறாய்
அசையும் மர இலைகளுக்கு
அப்பால் தெரியும் வானம்
மேகங்களின்றி பளிச்சென்றிருக்கிறது
அனல்காற்று வீசும்
பரபரப்பான சாலையை
மெல்ல கடக்கிறது
உனது வாகனம்
ஏன் அனல் ஏறிக் கொண்டே போகிறது
என்ற
மெல்லிய அச்சம் சூழ்கிறது
உன்னை
சட்டென நிகழ்ந்து விடும்
பல விஷயங்களின்
தாறுமாறான இயல்பால்
திகைக்கிறாய்
எப்போதோ
உள்ளங்கைகளில்
முகம் பொத்திக் கொள்கிறாய்
துயர் மிகும் பொழுதைக்
கடந்து உறங்குகையில்
நடுநிசியில்
உணரும் குளுமையால்
எழுந்து
சாளரங்களின் வழியே
பார்க்கிறாய்
எல்லாரும் உறங்கும் நகரில்
நீ
மட்டும் பெருமூச்சுடன் பார்த்திருக்க
பெய்து கொண்டிருக்கிறது
மழை