Tuesday 10 September 2019

பெருகும் கண்ணீரினும்
சொல் அற்ற மௌனங்கள்
அடர்த்தி கொண்டிருக்கின்றன
*
நினைவின் சுவடுகளில்
இனிமைகள் 
மட்டுமே எஞ்சி நிற்கின்றன
*
உன்னை
வானிலிருந்து
மண்ணுக்கு
எப்படி
கொண்டு வருவேன்
*
துக்கத்தால்
நீர் திரளும்
உன் முகம்
ஒரு மலைத் தொடரைப் போல
தனித்திருக்கிறது
*
இந்த உலகில்
எவ்வளவு 
இருக்கின்றன
இருந்தும்
ஏன்
இல்லாமல் போகிறது
*
விடை கொடுத்து விட்டு
உருவாக்கிக்
கொள்வது
எப்படி
*