Tuesday 10 September 2019

அச்சங்களும்
தயக்கங்களும்
ஐயங்களும்
பரவியிருக்கும் பெரும் பரப்பில்
நீ
மலராய் இருந்தாய்
மலராய் மட்டுமே இருந்தாய்
உன் முன்னால்
இந்த உலகம்
வேறொன்றாயிருந்தது
உடல் எடை அற்ற
மனம் நீர் ஆவி என்றான
உணர்வுகள் நெகிழ்ந்திருந்த
அனைத்தும் ஒத்திசைந்திருந்த
அந்த உலகம்
*
உதயத்தின் நாழிகைகளில்
மாலை அந்தியின் வினாடிகளில்
மெல்ல நகரும் இரவில்
ஓயாமல்
தேடிக் கொண்டிருக்கிறேன்
அந்த உலகை
என்னை
*