Friday 13 September 2019

துயர் நீங்காத முகத்துடன்
சோர்ந்து நடந்து வரும்
அந்த யாத்ரீகனுக்கு
சேருமிடம் என ஏதுமில்லை
செல்லிடமும் ஏதும் இல்லை
அவன் மிக மெல்லிய
நம்பிக்கையொன்றை
விடாமல் பற்றியிருக்கிறான்
அதனுடன்
முடிவில்லாமல்
சென்று கொண்டேயிருக்கிறான்