Monday 9 September 2019

நீ எவ்வளவு தொலைவில் இருக்கிறாய்
என்ன செய்து கொண்டிருக்கிறாய்

உனது காலைகள் உன்னை வாழ்த்தட்டும்
உனது மாலைகள் உனக்கு ஆசி அளிக்கட்டும்

அன்பின் மாற்றுருவமாய் துயரம் இருப்பது ஏன்

வான் எழும் அகம்
புவியில் நிலைத்திருக்கின்றன கால்கள்
உனது கண்ணீரை கட்டுப்படுத்துகிறாய்
அவ்வப்போது
நீ புரியும் புன்னகையில்
வெளிப்படுகிறது
ஒரு துளிக் கண்ணீரின்
சாரல்

அலைகளுக்கு அப்பால்
சிவந்திருக்கும் வான் முகம்
நோக்கி
நகர்கிறது
ஓர் ஒற்றைப் படகு