Monday 9 September 2019

உன் பார்வையின்
களங்கமின்மையை
கவியும் மேகத்திரளாக
ஒரு சிறு கீற்று வெளிச்சமாக
உள்ளங்கைகளுக்குள்
நிறைந்திருக்கும் அருவி நீராக
நான்
இன்னும் சொல்லாத பிரியங்களாக
மாற்றிக் கொள்கிறேன்

உன் மௌனங்களை
நீண்ட மௌனங்களுக்குப் பின்
வெளிப்படும்
கண்ணீர்த்துளியை
என்ன செய்வது என்பதை
என்னால் அறிய இயலவில்லை

யாருமற்ற
நீண்ட மண் சாலையில்
வீசும் காற்றில்
கலந்திருக்கிறது
மேலெழும்
மண் துகள்கள்