நீ
ஓர் அந்தியைப் போல
பிரியாமல் கலந்திருக்கும்
வெவ்வேறு உணர்வுகளால்
வெவ்வேறு மனநிலைகளால்
வெவ்வேறு எண்ணங்களால்
நிறைகிறாய்
அல்லது
இல்லாமல் போகிறாய்
நதிக்கரையில்
நின்றிருப்பவன்
பார்வையில் சுடர்கின்றன
நீர் மிதக்கும் மலர் தீபங்கள்
இரவு வந்து விட்டது