உனது மென் சிரிப்புகளின் போது
சிவக்கும் முகத்தை
உரை ஆடலில்
வியப்பில்
மலரும் உன் கண்களை
சுடர்ப்பார்வையில்
பரவும்
உன் மாசற்ற இயல்பை
நினைவில்
எப்போதும் மீட்டுகிறேன்
ஆளற்ற ஆலயத்தின்
நாக ஸ்வர இசை
தாழ்வாரங்களில்
மண்டபங்களில்
கோபுரத்தில்
ஆலய வீதிகளில்
இந்த அந்திப் பொழுதில்
ஒலிக்கிறது
ஒரு புனிதமான அரற்றலாக
சிவக்கும் முகத்தை
உரை ஆடலில்
வியப்பில்
மலரும் உன் கண்களை
சுடர்ப்பார்வையில்
பரவும்
உன் மாசற்ற இயல்பை
நினைவில்
எப்போதும் மீட்டுகிறேன்
ஆளற்ற ஆலயத்தின்
நாக ஸ்வர இசை
தாழ்வாரங்களில்
மண்டபங்களில்
கோபுரத்தில்
ஆலய வீதிகளில்
இந்த அந்திப் பொழுதில்
ஒலிக்கிறது
ஒரு புனிதமான அரற்றலாக