Monday 9 September 2019

உனது மென் சிரிப்புகளின் போது
சிவக்கும் முகத்தை
உரை ஆடலில்
வியப்பில்
மலரும் உன் கண்களை
சுடர்ப்பார்வையில்
பரவும்
உன் மாசற்ற இயல்பை
நினைவில்
எப்போதும் மீட்டுகிறேன்
ஆளற்ற ஆலயத்தின்
நாக ஸ்வர இசை
தாழ்வாரங்களில்
மண்டபங்களில்
கோபுரத்தில்
ஆலய வீதிகளில்
இந்த அந்திப் பொழுதில்
ஒலிக்கிறது
ஒரு புனிதமான அரற்றலாக