தொலைதூரம்
எல்லாமே உதிர்ந்து
விட்டிருக்கிறது
சிறு குன்று
விருட்ச நிழல்
கிராமத்துப் பாதையில்
பின்னால் அமர்ந்திருக்கும்
பெண்
கணவன் தோளை
அழுத்தமாகப் பற்றிக்
கொள்கிறாள்
துயரம் என்பதுதான்
என்ன
காளைகள்
வண்டிக்காரன் அளித்த
புல்லைத்
தின்னும் போது
சன்னமாய் ஒலிக்கிறது
ஓசை
நாட்கள் நகரும்
உலகில்