Tuesday 24 December 2019

ஒரு மலரில்
எப்போதுமே
வியப்பதற்கோ
புதிதாக நோக்குவதற்கோ
அறியாத ஒன்றை உணர்ந்து கொள்வதற்கோ
அதன்
மென்மணத்தை
பொறியியலை
அளவற்ற தனிமையை
பிரமிப்பதற்கோ
ஒன்று
இருந்து கொண்டே யிருக்கிறது

உன்னுடன்
நடந்த போது
சொன்னேன்

நீ
நுண் உருவங்கள்
சுழன்று பெருகும்
சிவந்த கோலம்
இடப்பட்டிருந்த
கரம் ஒன்றில்
நீண்ட இரு விரல்களுக்கு
இடையே
காம்பு புவி நோக்கியும்
இதழ்கள் வான் நோக்கியும்
மீண்டும் பூத்த
மலரொன்றை
ஏந்தியிருந்தாய்