ஒரு மலரில்
எப்போதுமே
வியப்பதற்கோ
புதிதாக நோக்குவதற்கோ
அறியாத ஒன்றை உணர்ந்து கொள்வதற்கோ
அதன்
மென்மணத்தை
பொறியியலை
அளவற்ற தனிமையை
பிரமிப்பதற்கோ
ஒன்று
இருந்து கொண்டே யிருக்கிறது
உன்னுடன்
நடந்த போது
சொன்னேன்
நீ
நுண் உருவங்கள்
சுழன்று பெருகும்
சிவந்த கோலம்
இடப்பட்டிருந்த
கரம் ஒன்றில்
நீண்ட இரு விரல்களுக்கு
இடையே
காம்பு புவி நோக்கியும்
இதழ்கள் வான் நோக்கியும்
மீண்டும் பூத்த
மலரொன்றை
ஏந்தியிருந்தாய்
எப்போதுமே
வியப்பதற்கோ
புதிதாக நோக்குவதற்கோ
அறியாத ஒன்றை உணர்ந்து கொள்வதற்கோ
அதன்
மென்மணத்தை
பொறியியலை
அளவற்ற தனிமையை
பிரமிப்பதற்கோ
ஒன்று
இருந்து கொண்டே யிருக்கிறது
உன்னுடன்
நடந்த போது
சொன்னேன்
நீ
நுண் உருவங்கள்
சுழன்று பெருகும்
சிவந்த கோலம்
இடப்பட்டிருந்த
கரம் ஒன்றில்
நீண்ட இரு விரல்களுக்கு
இடையே
காம்பு புவி நோக்கியும்
இதழ்கள் வான் நோக்கியும்
மீண்டும் பூத்த
மலரொன்றை
ஏந்தியிருந்தாய்