பத்து நாட்களாக உடல்நலத்தில் சிறு குறைவு. இருமல். சற்று சிரமமாக இருந்தது. சிறிது நேரம் தொடர்ச்சியாகப் பேசினால் இருமல் வந்தது. உடல் சோர்வடைந்திருந்தது. சென்னையிலிருந்து ஒரு நண்பர் வந்திருந்தார். நலக்குறைவுடனே அவருடன் சுவாமிமலை, திருவலஞ்சுழி, பழையாறை ஆகிய ஆலயங்களுக்குச் சென்று வந்தேன். வணிகம் தொடர்பாக சில பணிகள். அலைச்சல்.