Friday 3 April 2020

நினைவு

உன்னை எண்ணும் போது
நீர்ச்சாரல் சுமக்கும் காற்று
அலைகடலின் இள வெம்மை
குளிர் நிறையும் மலைப்பிரதேசம்
நிலம் கரைக்கும் மழை
பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள்
சில்வண்டுகளின் சீரொலி
சோலையில் கேட்கும் ஒற்றைக் குயிலோசை
வண்டிக்காளையின் கழுத்து மணி அசைவு
மௌனம் நிரம்பிய அந்திப் பொழுது
நினைவில் எழுகின்றன
கண்ணீர்த்துளிகள்
மெல்ல கரைத்துக் கொண்டிருக்கின்றன
அகம் கொள்ளும் தளைகளை