Friday 3 April 2020

பொழுதிணைவு

மாலைப் பொழுதின்
சிவப்புக் கதிர்கள்
மிதந்து கொண்டிருக்கும் காற்று
நம்மைத் தீண்டிய போது
நீ
ஒரு மலரைப் பற்றி
என்னிடம்
சொன்னாய்
காட்டுத்தீயை
நான்
சொன்னேன்
அரசமரத்தின்
கணநாதன்
சிலை முன்னால்
நாம் ஏற்றிய
தீச்சுடரை
ஒரு மலரைப் போல்
காக்கின்றன
உன் விரல்கள்