மாலைப் பொழுதின்
சிவப்புக் கதிர்கள்
மிதந்து கொண்டிருக்கும் காற்று
நம்மைத் தீண்டிய போது
நீ
ஒரு மலரைப் பற்றி
என்னிடம்
சொன்னாய்
காட்டுத்தீயை
நான்
சொன்னேன்
அரசமரத்தின்
கணநாதன்
சிலை முன்னால்
நாம் ஏற்றிய
தீச்சுடரை
ஒரு மலரைப் போல்
காக்கின்றன
உன் விரல்கள்
சிவப்புக் கதிர்கள்
மிதந்து கொண்டிருக்கும் காற்று
நம்மைத் தீண்டிய போது
நீ
ஒரு மலரைப் பற்றி
என்னிடம்
சொன்னாய்
காட்டுத்தீயை
நான்
சொன்னேன்
அரசமரத்தின்
கணநாதன்
சிலை முன்னால்
நாம் ஏற்றிய
தீச்சுடரை
ஒரு மலரைப் போல்
காக்கின்றன
உன் விரல்கள்