Wednesday 10 June 2020

அமிர்தவர்ஷிணி

தீயென
உணர்ந்த போது
தாகம் தணித்துக் கொண்டிருந்தாய்
மாலையில் இல்லாமல்
காலையில் உயிர்த்திருக்கும்
பசுந் தளிர்களாய்
முளைத்துக் கொண்டிருந்தாய்
மீன்களென அசைந்தன
புவியெங்கும் மலர்கள்
கரைந்து கொண்டிருக்கிறது பனிக்கட்டி