Saturday 27 June 2020

உயிர்

உன்னிடம்
கண்ணீர் சிந்தும் போது
நீ
மௌனம் கொள்கிறாய்
அந்த
மௌனம்
அனாதி காலங்களைக்
கடந்து
வந்திருக்கிறது
முடிவற்ற வெளியின்
ஒளித்துளிகள்
மாயக்கணம் ஒன்றில்
உயிர்க்கச் செய்கின்றன
புதிய உயிர்
ஒன்றை