Friday 25 September 2020

 சிறு குன்றின்
மேலேறி நிற்கிறோம்
இன்னும்
மூச்சு வாங்குகிறது
உனக்கு
வியர்வை அரும்பும் உன் முகம்
தாமரை பூத்த தடாகம்
என்கிறேன்
ஒன்றும் சொல்லாமல்
சூரியச் சிவப்பை மட்டும் காண்கிறாய்
அன்னை விரல்களென 
உன் முகத்தை
வருடிக் கொண்டிருக்கின்றன
அந்திக் கதிர்கள்
தூய மௌனம் நிரம்புகிறது
குன்றெங்கும்
சட்டென
விசும்புகிறாய்
மெல்ல அழுகிறாய்
ஒன்றும் சொல்லாமல்