Friday 16 October 2020

ஒளி

பிறக்கும்
ஒவ்வொரு மலரும்
தன் மலர்வால்
தன்னியல்பால்
ஓயாமல்
இறைமைக்கு
நன்றி தெரிவிக்கின்றன

மலர்களுக்கான
வானின் ஆசிகளை
ஏந்தி
நிரம்புகிறது
ஒளியால் இவ்வுலகம்