Saturday 21 August 2021

பிரார்த்தனை

அது ஒரு நதிக்கரை
அந்திப் பொழுது
சோழிகள் உருளும் ஒலியுடன்
நகர்ந்து கொண்டிருக்கிறது நீர்
நீருக்கு மேலே
நீரைச் சுற்றி
வட்டமிடுகின்றன
கழுகுகள்
கொற்றப்புள் ஒன்று
அமர்ந்த 
ம்ரத்தின் கிளை
மெல்ல
அசைகிறது
மேலும் 
கீழும்
கொற்றப்புள்ளுடன்
அந்த
இடத்தை
பொழுதை
வெளியை
நிறைக்கிறது
மாசின்மையின் மாயம்
உன் நினைவுகள்
எழும் போது
அகத்தில் மௌனம் நிறைய
இறையின் பெயர்களை
இறையின் இயல்புகளை
உச்சரிக்கத் துவங்குகிறேன்