Monday 5 September 2022

நினைவு

ஒரு மலர்க்காட்டின் 
மலரிதழ்
காற்றில்
மிதந்து
சென்று கொண்டேயிருக்கிறது

உனது உள்ளங்கைகளில்
நித்யமாக
ஒட்டிக் கொண்டிருக்கிறது
மேகங்களின் நீர்மை

ஒளி வீசும் உன் புன்னகைகள்
நம்பிக்கைகளை அளித்துக் கொண்டே இருக்கும் 
உனது வார்த்தைகள்
எப்போதும் அமைதி தரும் உனது கருணை

நினைவுகளில்
நீ
ஒளியானாய்
நீ
நிலவானாய்
நீ
சுடரானாய்

அந்திப் பொழுதில்
அந்திப் பொழுதை
தொழுகிறான்
ஓர் எளிய மனிதன்