Friday 25 November 2022

வெயில்

இந்திய மரபில் கணவன் - மனைவி உறவென்பது மிகவும் தனித்துவமானது. யோசித்துப் பார்த்தால் உலகின் அத்தனை மரபுகளுமே கணவன் - மனைவி உறவின் தனித்துவத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளன. ஒருவர் மற்றவரை முழுமையாக அறிந்து கொள்வது என்பது எல்லா உறவுகளிலும் சாத்தியம் எனினும் கணவன் - மனைவி உறவில் அதற்கான சதவீதம் பல மடங்கு அதிகம். 

’’நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள்’’ என பட்டினத்தார் கூறியது போல தனது இனிய துணையை இழந்த ஒருவரின் நினைவில் நீடிக்கும் உறவின் இனிமையைக் கூறும் சிறுகதை தி. ஜா வின் ‘’வெயில்’’.