வாழ்க்கை நூதனமானது. அது மிகப் பெரியது என்பதால் நூதனமானது. அது மிகப் பெரியது என்பதால் சிக்கலானது. மேற்படி இரண்டு கூற்றுகளின் மறுபக்கமாக அதன் மிகப் பெரிய தன்மையே எதனையும் சாதாரணமாக ஆக்கக் கூடியதும் கூட.
துரதிர்ஷ்டத்தின் விளைவால் மனைவியையையும் மகளையும் சந்திக்க இயலாமல் நீண்ட ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் ஒருவர் எதிர்பாராத நிகழ்வாக மகளைச் சந்திக்க நேர்கிறது. அந்த சந்திப்பு அவருக்கு எதிர்பாராத ஒன்றை அளிக்கிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தை சிறுகதையாக்கியிருக்கிறார் தி.ஜா.