ஏழ்மையான குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்த ஒருவர் இன்று நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார். இதுநாள் வரை ஜவஹர்லால் நேரு மட்டுமே தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமராகியிருக்கிறார். 62 ஆண்டுகளுக்குப் பின் இந்த விஷயம் நிகழ்ந்திருப்பது சிறப்புக்குரியது. இந்திய ஜனநாயகம் சாத்தித்திருக்கும் விஷயங்களில் குறிப்பிடத்தகுந்தது. இன்றைய தினம் இந்திய ஜனநாயகத்துக்கு மேலும் ஒரு சிறப்பு நிகழ்ந்திருக்கும் தினம்.