வசந்தம் என்பது
மதுரம்
அதி மதுரம்
மலரை மிக மென்மையாய் ஸ்பரிசிக்கும் பட்டாம்பூச்சியிடம்
மலர்களில் உள்ளுறையும்
தேனைத்
துளித்துளியாய் சேர்த்துக் கொள்ளும் தேனீயிடம்
புற்களைக் கொண்டு
அற்புதமான தங்குமிடம்
நிர்மாணிக்கும்
குருவியிடம்
விட்டு விடுதலையாகி நிற்கும்
சிட்டுக்களிடம்
உடனிருந்து
உணரவேண்டியது
வசந்தத்தின் அதிமதுரம்