அம்மா அம்மா அம்மா
எங்கோ பாதை தவறி விட்டேன்
எங்கெங்கோ
நெடுந்தூரம் நெடுநேரம்
சென்று விட்டேன்
சகதிகளால் ஆனது வழி தவறிய பாதை
முட்களால் ஆனது வழி தவறிய பாதை
கூரிய கற்களால் ஆனது வழி தவறிய பாதை
என்னை
நற்பாதைக்குக் கொண்டு வா அம்மா
அந்தப் பாதையில்
நிழல் மரங்கள் இருக்கட்டும்
பூ மரங்கள் இருக்கட்டும்
கனி மரங்கள் இருக்கட்டும்
அந்தப் பாதையில்
தாகம் தீர்க்கும்
நன்னீர் நிலைகள் இருக்கட்டும்
சகபயணிகளாய்
நன்மனிதர்கள் இருக்கட்டும்
என்றும்
யாருக்கும்
எப்போதும்
நற்பாதையின் பயணம்
இனியதாகவே இருக்கட்டும்
அம்மா அம்மா அம்மா