Thursday, 18 June 2026

குல்ஃபி ஐஸ் (நகைச்சுவைக் கட்டுரை)

35 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. அப்போது துவக்கப்பள்ளியை நிறைவு செய்து உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்திருந்தேன். உறவினர் ஒருவர் வீட்டுக்கு சென்னை சென்றிருந்தேன். அந்த வீட்டில் சிறுவர்களும் இளைஞர்களும் அதிகம். ஆகவே சிறுவனான நான் அங்கே உற்சாகமாக இருந்தேன்.  இரவு 10 மணிக்கு அங்கே குல்ஃபி ஐஸ் வந்து மணியடிக்கும் சத்தம் கேட்கும். எனக்கு குல்ஃபி ஐஸ் வாங்கித் தந்தார்கள். சில தகவல்களுடன் குல்ஃபி ஐஸ் எனக்கு அறிமுகமானது. அதாவது குல்ஃபி ஐஸ் சென்னையில் இரவு 10 மணிக்கு மேல்தான் விற்பனை ஆகும். இரவு 10 லிருந்து காலை 3 வரை. இதற்கென காத்திருந்து வாங்குவார்கள். பகலில் குல்ஃபி ஐஸ் விற்பனை இருக்காது. முதல் நாள் சாப்பிட்டோம். இரண்டாம் நாள் சாப்பிட்டோம். மூன்றாம் நாள் இரவு உணவு அருந்தியதும் சிறுவர்களாகிய நாங்கள் இன்றைக்கும் குல்ஃபி ஐஸ் வேண்டும் என்று சொன்னோம். அந்த வீட்டின் பெரியவர் ‘’தினமும் குல்ஃபி ஐஸ் சாப்பிடக் கூடாது ; என்றைக்காவது ஒருநாள் தான் சாப்பிட வேண்டும்’’ என்றார். 

அவர் சொன்னதற்கு முதல் நாள் குல்ஃபி சாப்பிட்டதோடு சரி ; அதன் பின் 35 ஆண்டுகளுக்குப் பின் நேற்று இரவு ஊரில் குல்ஃபி ஐஸ் சாப்பிட்டேன்.