அன்புள்ள அண்ணனுக்கு,
நீங்கள் என்னை தொலைபேசியில் அழைக்காமல் இருப்பது எனக்கு ஒரு வகையில் மன கஷ்டத்தை தான் கொடுக்கிறது.
ஏதோ ஒரு வகையில் நான் உங்களை ரசிக்க ஆரம்பித்து விட்டேன் கவனிக்க ஆரம்பித்து விட்டேன்.
எதற்காக என்றால் என்னிடம் பதில் இல்லை.
உங்கள் அளவுக்கு என்னால் பேச முடியவில்லை அந்த அளவுக்கு என்னிடம் தகவலும் இல்லை. இருந்தாலும் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் என்னை ஒரு முறை காசி வரை பயணம் செய்ய வேண்டும் என்பதுதான்.
அந்த ஆசை கூட நான் உங்களிடத்தில் பேச வேண்டிய விஷயத்தை பேசிவிட முடியும் உங்களிடமிருந்து ஒன்றை கற்றுக் கொள்ள முடியும் என்பது தான்.
என்றும் உங்களை நினைவில் வைத்திருக்கும்
உங்கள் அன்புத்தம்பி