Thursday, 3 September 2026

தெருவிளக்கு - முதல் மேல்முறையீடு

அனுப்புநர்

ர.பிரபு
&&&&&
&&&&
&&&

பெறுநர்

மேல்முறையீட்டு அதிகாரி
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

ஐயா,

பொருள் : தகவல் பெறும் உரிமைச் சட்டம் - முதல் மேல்முறையீடு
பார்வை : த.பெ.உ.ச.ப. ***/2026/அ*நாள்.25.08.2026 

15.08.2026 அன்று ***** ஊராட்சியில் நிகழ்ந்த கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் கோட்டாட்சியர் கலந்து கொண்டார். அந்தக் கிராம சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஊராட்சியின் வரவு செலவு அறிக்கையில் ( 01.04.2026 தேதி முதல் 31.07.2026 வரை) தெரு விளக்கு சரி செய்ய என ரூ.25,000 மற்றும் மின் விளக்கு வாங்க என ரூ.8000 என 4 மாதத்தில் ரூ.33,000 செலவிடப்பட்டுள்ளது என கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பார்வையாளனாக கலந்து கொண்ட நான் அதனை தணிக்கை அல்லது மறுதணிக்கை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தேன். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்படி காலகட்டத்தின் தெருவிளக்கு தொடர்பான செலவு விபரங்களைக் கோரியிருந்தேன்.  

இந்த விஷயம் குறித்த எனது கடிதமும் இந்த விஷயம் தொடர்பான எனது தகவல் பெறும் உரிமைச்சட்ட மனுவும் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு உரிய பதில் அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் அனுப்பி வைக்கப்பட்டு அக்கடிதங்களின் நகல் எனக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. 

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முதல் மேல்முறையீட்டு அதிகாரி என்ற விதத்தில் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் என்னுடைய மேல்முறையீட்டை பணிவுடன் முன்வைக்கிறேன். 

(1) ***** ஊராட்சியின் 01.04.2026 முதல் 31.07.2026 வரையிலான தெருவிளக்கு செலவு தொடர்பான விபரங்களை ***** ஊராட்சி அலுவலகத்திடம் பெற்று மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகமே அளிக்க வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அதிகாரம் உள்ளது. 

(2) கிராம நிர்வாகம் ஊராட்சி நிர்வாகத்தையும் உள்ளடிக்கியது என்ற விதத்திலும் வருவாய் கோட்டாட்சியர் ஊராட்சி வரவு செலவு கணக்குகளின் தணிக்கை அதிகாரி என்ற அதிகாரத்திலும் ஊராட்சியிடம் மேற்படி தெருவிளக்கு செலவு தொடர்பான விபரங்களைக் கேட்டுப் பெற முடியும். 

(3) ஊராட்சி நிர்வாகம் வருவாய் கோட்டாட்சியருக்கு அளிக்கும் பதில் கணக்கு தணிக்கை அடிப்படையில் ஒரு சாமானியக் குடிமகனுக்கு அளிக்கும் பதிலை விட பல மடங்கு அடர்த்தி கொண்டது. ஊராட்சி நிர்வாகம் அளிக்கும் கணக்கை எப்போது வேண்டுமானாலும் தணிக்கைக்கு உட்படுத்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அதிகாரம் உண்டு என்பதால் வருவாய் கோட்டாட்சியருக்கு ***** ஊராட்சி அளிக்கும் பதிலைக் கூட தணிக்கைக் கோணத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தால் ஆராய முடியும். தகவல் தொடர்பு இடைவெளி இன்றி யதார்த்த நிலவரம் ஆக சீக்கிரம் வருவாய் கோட்டாட்சியர் கவனத்துக்கு வரும். 

(4) அரசு பல துறைகளாகப் பிரிந்து பணியாற்றுவது என்பது குடிமக்களுக்கு சிறப்பான அரசு சேவை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே என்பதால் வருவாய் கோட்டாட்சியர் ஊராட்சிகளின் தணிக்கை அதிகாரி என்ற முறையில் நேரடியாகவே விபரம் கோரி அதனை தன் அலுவலகம் மூலமாகவே அளிக்க சட்டம் அனுமதிக்கிறது என்பதை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

(5) இந்த மேல்முறையீட்டின் மூலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முதல் மேல்முறையீட்டு அதிகாரியான வருவாய் கோட்டாட்சியரிடம் 01.04.2026 முதல் 31.07.2026 வரையிலான ***** ஊராட்சியின் தெருவிளக்கு பழுது பார்த்தல் தொடர்பான கணக்கை வருவாய் கோட்டாட்சியரே தன் அதிகாரம் மூலம் ***** ஊராட்சியிடமிருந்து பெற்று தகவல் கோரிய எனக்கு அனுப்பி வைக்குமாறு மேல்முறையீடு செய்து கொள்கிறேன். 

தங்கள் உண்மையுள்ள,

*****


இடம் : மயிலாடுதுறை
நாள் : 01.09.2026