Tuesday 30 October 2018

சோம்பிய மாடுகள்
திரியும் வீதிகளில்
பூட்டிக் கிடக்கின்றன
சில ஆளற்ற வீடுகள்
உச்சி வெயிலில்
குளிர்ந்திருக்கின்றது
தடாகத்தின் நீர் ஆழம்
ஆயிரமாண்டுத் தனிமையை
அவ்வப்போது
நினைவுபடுத்துகிறது
ஆலய மணியோசை
எப்போதும் அணையாத
விளக்கின் சுடர் ஒன்று
அங்கிங்கு அசைகிறது
பெரும் காற்றில்