Sunday 6 January 2019

புத்தம் சரணம் கச்சாமி

உன்னைச் சூழ்ந்திருந்த காற்று
தன் அருட்கரங்களால்
தீண்டியது
என்னை
தொலைதூரத்தில்
தொலை ஆழத்தில்
அமிழ்ந்திருந்த
என்னை

அகங்காரம் உண்டாக்கும் வலியிலும்
அறியாமை  இருளிலும்
இச்சைகளின் முடிவிலா சுழலிலும்
உழன்று கொண்டிருந்த உயிர்க்கு
உன் அருள் முகம்
அமைதி தந்தது

உன் புன்னகை வதனம்
நோக்கி
நடக்கிறேன்
என் ஆணவங்களை
என் சிறுமைகளை
என் எல்லைகளை
உதிர்த்து விட்டு