உன்னைச் சூழ்ந்திருந்த காற்று
தன் அருட்கரங்களால்
தீண்டியது
என்னை
தொலைதூரத்தில்
தொலை ஆழத்தில்
அமிழ்ந்திருந்த
என்னை
அகங்காரம் உண்டாக்கும் வலியிலும்
அறியாமை இருளிலும்
இச்சைகளின் முடிவிலா சுழலிலும்
உழன்று கொண்டிருந்த உயிர்க்கு
உன் அருள் முகம்
அமைதி தந்தது
உன் புன்னகை வதனம்
நோக்கி
நடக்கிறேன்
என் ஆணவங்களை
என் சிறுமைகளை
என் எல்லைகளை
உதிர்த்து விட்டு
தன் அருட்கரங்களால்
தீண்டியது
என்னை
தொலைதூரத்தில்
தொலை ஆழத்தில்
அமிழ்ந்திருந்த
என்னை
அகங்காரம் உண்டாக்கும் வலியிலும்
அறியாமை இருளிலும்
இச்சைகளின் முடிவிலா சுழலிலும்
உழன்று கொண்டிருந்த உயிர்க்கு
உன் அருள் முகம்
அமைதி தந்தது
உன் புன்னகை வதனம்
நோக்கி
நடக்கிறேன்
என் ஆணவங்களை
என் சிறுமைகளை
என் எல்லைகளை
உதிர்த்து விட்டு