Thursday 31 January 2019

உன்னைப் பற்றிய வரிகள்

நாம் சந்திப்பதற்கு முன்பே
உன்னைப் பற்றிய வரிகளை எழுதிவிட்டேன்
அவை அனாதி காலமாக எழுதப்படுகின்றன
நீல வானில்
வெண் மேகங்களில்
முழு நிலவில்
கூழாங்கற்களின் மேல் ஓடும் நதியில்
உன்னைப் பற்றிய சொற்கள் உருக்கொண்டன
மண்ணில் நிகழும் மகத்தான அனைத்தும்
சித்தரிக்கப்பட்ட போது
அவை உன் சாயலுடனிருந்தன
விசும்பு நோக்கி
மனித விழிகள் எழும் தோறும்
உன்னைப் பற்றிய வரிகளில்
புதிதாய் சில வார்த்தைகள் சேர்ந்து கொண்டிருந்தன
உன்னைப் பற்றிய வரிகள்
விதையாகின்றன
மலராகின்றன
உயிர்த் தீயாய் எழுகின்றன