நீ அறிந்திருக்க மாட்டாய்
நேரடியான அல்லது மெல்லிய நுட்பமான
வன்முறைகளை
ஓயாமல் பெருகும் குரோதங்களை
ஊற்றெடுக்கும் வற்றாத கண்ணீரை
சினத்தின் வெம்மைகளை
அச்சத்தின் கவசங்களை
துயரத்தின் பெருங்குரல் அரற்றல்களை
அபயம் கிடைக்குமா என பரிதவிக்கும் நெஞ்சங்களை
தாகம் கொண்ட ஜீவிதங்களை
பாதம் நோக்கும்
உன் உள்ளங்கையிலிருந்து
அன்பின் ஜீவநதிகள் பாய்கின்றன
அவற்றில்
மூழ்கி மூழ்கி
மேலெழுந்து
பறக்கின்றன
வானகப் புள்ளினங்கள்
அது கண்டு
கை கொட்டி
பரவசமாய்
உற்சாகமாய்
சிரிக்கின்றனர்
மழலைச் சிறுவர்கள்
அவர்கள் மகிழும் போதெல்லாம்
பிறக்கிறது
ஒரு தூய பூமி
நேரடியான அல்லது மெல்லிய நுட்பமான
வன்முறைகளை
ஓயாமல் பெருகும் குரோதங்களை
ஊற்றெடுக்கும் வற்றாத கண்ணீரை
சினத்தின் வெம்மைகளை
அச்சத்தின் கவசங்களை
துயரத்தின் பெருங்குரல் அரற்றல்களை
அபயம் கிடைக்குமா என பரிதவிக்கும் நெஞ்சங்களை
தாகம் கொண்ட ஜீவிதங்களை
பாதம் நோக்கும்
உன் உள்ளங்கையிலிருந்து
அன்பின் ஜீவநதிகள் பாய்கின்றன
அவற்றில்
மூழ்கி மூழ்கி
மேலெழுந்து
பறக்கின்றன
வானகப் புள்ளினங்கள்
அது கண்டு
கை கொட்டி
பரவசமாய்
உற்சாகமாய்
சிரிக்கின்றனர்
மழலைச் சிறுவர்கள்
அவர்கள் மகிழும் போதெல்லாம்
பிறக்கிறது
ஒரு தூய பூமி