Thursday 31 January 2019

தூய பூமி

நீ அறிந்திருக்க மாட்டாய்

நேரடியான அல்லது மெல்லிய நுட்பமான
வன்முறைகளை
ஓயாமல் பெருகும் குரோதங்களை
ஊற்றெடுக்கும் வற்றாத கண்ணீரை
சினத்தின் வெம்மைகளை
அச்சத்தின் கவசங்களை
துயரத்தின் பெருங்குரல் அரற்றல்களை
அபயம் கிடைக்குமா என பரிதவிக்கும் நெஞ்சங்களை
தாகம் கொண்ட ஜீவிதங்களை

பாதம் நோக்கும்
உன் உள்ளங்கையிலிருந்து
அன்பின் ஜீவநதிகள் பாய்கின்றன
அவற்றில்
மூழ்கி மூழ்கி
மேலெழுந்து
பறக்கின்றன
வானகப் புள்ளினங்கள்
அது கண்டு
கை கொட்டி
பரவசமாய்
உற்சாகமாய்
சிரிக்கின்றனர்
மழலைச் சிறுவர்கள்
அவர்கள் மகிழும் போதெல்லாம்
பிறக்கிறது
ஒரு தூய பூமி