Tuesday 5 February 2019

கிருஷ்ண முரளி - 3

என் அன்பின் மலர்களில்
உறைகிறது
உனக்கான குளிர் இளம் தேன்
உன் இசையின் மாயம்
ஹிருதயத்தில்
ஊறச் செய்கிறது
இனிமையின் பரவசங்களை
உன் கருணையில்
நீர்மை கொள்கின்றன
என் விழிகள்
உன் முடிவிலா அன்பில்
கரைந்து கொண்டேயிருக்கிறேன்
கணம் கணமாய்