இன்று
மூன்றாம் நாள் நிலவைக் கண்டீர்களா?
நான் கண்டேன்
பிள்ளைச் சிரிப்பு போன்ற வான் சிரிப்பை
யாதும் ஒன்றென உணர்ந்தவன்
விரும்பி அணிந்த அணியை
பால் வேண்டி அழுத ஞானக்குழந்தை
அம்மையப்பனுடன் பெற்ற தரிசனத்தை
சத்தியமாய் சுந்தரமாய்
கோலம் காட்டும்
பரம்பொருளை
இன்று
மூன்றாம் நாள் நிலவைக் கண்டீர்களா?
நான் கண்டேன்
மூன்றாம் நாள் நிலவைக் கண்டீர்களா?
நான் கண்டேன்
பிள்ளைச் சிரிப்பு போன்ற வான் சிரிப்பை
யாதும் ஒன்றென உணர்ந்தவன்
விரும்பி அணிந்த அணியை
பால் வேண்டி அழுத ஞானக்குழந்தை
அம்மையப்பனுடன் பெற்ற தரிசனத்தை
சத்தியமாய் சுந்தரமாய்
கோலம் காட்டும்
பரம்பொருளை
இன்று
மூன்றாம் நாள் நிலவைக் கண்டீர்களா?
நான் கண்டேன்