இந்த மாலை
சூரியன்
செங்கோளமாய் உலகணைக்கும்
இந்த மாலை
வெண்நுரை பொங்கும் கடல்
கரையில் நிற்கும் கால்களைத்
தீண்டி
உள்ளம் குளிர்விக்கும்
இந்த மாலை
முதல் முறை கடல் காணும் சிறுவன்
பிரமித்து
தான் இதன் முன் வந்தது போல்
கடல்
தன்னுடன்
தன் வீட்டின் முன்
வந்துவிட்டால்
என்ன செய்வது
என்று திகைத்து
இதை யாரிடம் கேட்பது
என்று
யோசித்துக் கொண்டிருக்கிறான்
சூரியன்
செங்கோளமாய் உலகணைக்கும்
இந்த மாலை
வெண்நுரை பொங்கும் கடல்
கரையில் நிற்கும் கால்களைத்
தீண்டி
உள்ளம் குளிர்விக்கும்
இந்த மாலை
முதல் முறை கடல் காணும் சிறுவன்
பிரமித்து
தான் இதன் முன் வந்தது போல்
கடல்
தன்னுடன்
தன் வீட்டின் முன்
வந்துவிட்டால்
என்ன செய்வது
என்று திகைத்து
இதை யாரிடம் கேட்பது
என்று
யோசித்துக் கொண்டிருக்கிறான்