Thursday 7 February 2019

மணற்துகளே நீர்த்திரளே

இந்த மாலை
சூரியன்
செங்கோளமாய் உலகணைக்கும்
இந்த மாலை
வெண்நுரை பொங்கும் கடல்
கரையில் நிற்கும் கால்களைத்
தீண்டி
உள்ளம் குளிர்விக்கும்
இந்த மாலை
முதல் முறை கடல் காணும் சிறுவன்
பிரமித்து
தான் இதன் முன் வந்தது போல்
கடல்
தன்னுடன்
தன் வீட்டின் முன்
வந்துவிட்டால்
என்ன செய்வது
என்று திகைத்து
இதை யாரிடம் கேட்பது
என்று
யோசித்துக் கொண்டிருக்கிறான்