Wednesday 20 March 2019

கண மலர்

நீ இடும்
பூத்தையலில்
மெல்ல
உருக் கொண்டவாறு
இருக்கிறது
ஒரு மலர்
நீ
உன் பார்வையை
முழுதும்
அதன் மேல்
நாட்டுகிறாய்
உனது விரல் நுனியால்
தீண்டுகிறாய்
மலர்ந்த வேளை
நீ
புன்னகைக்கிறாய்
சட்டென
மலர்கிறது
இன்னொன்று