எல்லா இலைகளும் உதிர்ந்து
நீர்மையற்ற பரப்பில்
நின்று இருக்கும் மரம்
இடைவிடாது
வேர்களால்
துழாவுகிறது
ஆழங்களில் உறையும் உயிர்ப்பை
மழலைக் கிளைகள்
தீண்ட
நீட்டுகின்றன
முடிவற்ற
அமிர்த வான் நோக்கி
நீர்மையற்ற பரப்பில்
நின்று இருக்கும் மரம்
இடைவிடாது
வேர்களால்
துழாவுகிறது
ஆழங்களில் உறையும் உயிர்ப்பை
மழலைக் கிளைகள்
தீண்ட
நீட்டுகின்றன
முடிவற்ற
அமிர்த வான் நோக்கி